Paristamil Navigation Paristamil advert login

ஈரானில் ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்கள்...!  அரசின் பகீர் அறிவிப்பு

ஈரானில் ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்கள்...!  அரசின் பகீர் அறிவிப்பு

16 கார்த்திகை 2024 சனி 12:31 | பார்வைகள் : 3189


ஈரான் நாட்டில்  ஹிஜாப் அணிய பெண்கள் மறுத்து வருகின்றார்கள். இந்நிலையில் ஈரான் அரசு பெண்களின் மனநிலை தொடர்பில் ஆய்வுகள் செய்ய உத்தேசித்துள்ளது.

ஈரானில் ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரானில் கட்டாய ஹிஜாப் சட்டத்தை பின்பற்ற மறுக்கும் பெண்களுக்கு “மனநல சிகிச்சை" செய்வதற்காக புதிய மருத்துவ மையங்களை திறக்க  இருப்பதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

கடுமையான உடை விதிமுறைகளுக்கும் பெண்களின் உரிமைகள் மீதான பரந்த கட்டுப்பாடுகளுக்கும் எதிராக தொடர் போராட்டங்களின் மத்தியில் இந்த நடவடிக்கை வருகிறது.

ஈரானின் பெண்கள் மற்றும் குடும்பத் துறையின் தலைவர் மெஹ்ரி தலேபி தரேஸ்தானி, மருத்துவ மையங்களுக்கான திட்டங்களை அறிவித்து, அவை "ஹிஜாப் நீக்கத்திற்கான அறிவியல் மற்றும் உளவியல் சிகிச்சையை" வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

ஈரான் அரசின் இந்த அறிவிப்புக்கு பரவலான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

ஈரானிய அரசாங்கம் பெண்களின் தேர்வுகளை மேலும் கட்டுப்படுத்தவும் பழமைவாத நெறிகளைச் செலுத்தவும் முயற்சிப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்