Paristamil Navigation Paristamil advert login

மகளிர் டி20 உலக கோப்பை போட்டி - இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!

மகளிர் டி20 உலக கோப்பை போட்டி - இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!

18 ஐப்பசி 2024 வெள்ளி 07:15 | பார்வைகள் : 134


மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலிய அணியை  8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதல் பேட்டிங்கில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் குவித்தது.


அவுஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக பெத் மூனி(Beth Mooney) 42 பந்துகளுக்கு 44 ஓட்டங்கள் குவித்தார்.

இறுதிப் போட்டி கனவுடன் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி தனது திறமையான ஆட்டத்தை ஆரம்பம் முதலே வெளிப்படுத்தியது.

கேப்டன் லாரா வோல்வார்ட்(Laura Wolvaardt) 37 பந்துகளில் 42 ஓட்டங்களும், அன்னெக் போஷ்(Anneke Bosch) 48 பந்துகளில் 74 ஓட்டங்களும் குவித்து அணியை வெற்றி அடைய செய்தனர்.

இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 17.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 135 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 2024 ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்