சீரற்ற காலநிலை.. பரிசில் ஒருவர் பலி!

18 ஐப்பசி 2024 வெள்ளி 08:22 | பார்வைகள் : 10244
சீரற்ற காலநிலை காரணமாக தலைநகர் பரிசில் மரணம் ஒன்று பதிவாகியுள்ளது.
தனது குடும்பத்துடன் மகிழுந்தில் பயணித்த ஒருவரது மகிழுந்து மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்கு மருத்துவ உதவிக்குழுவினர் விரைந்து சென்றனர். 3 மற்றும் 5 வயதுடைய இரு சிறுமிகள் அவருடைய தாய், தந்தை ஆகிய நால்வர் மகிழுந்தில் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் காயமடைந்துள்ளனர்.
அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், பிள்ளைகளின் தனதை காயம் காரணமாக பலியாகியுள்ளார்.
ஒக்டோபர் 17, நேற்று வியாழக்கிழமை மாலை பரிஸ் 19 ஆம் வட்டாரத்தின் rue Curial வீதியில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1