Paristamil Navigation Paristamil advert login

 ருத்ர தாண்டவமாடிய ரிஷப் பண்ட் 99 ரன்னில் அவுட் 

 ருத்ர தாண்டவமாடிய ரிஷப் பண்ட் 99 ரன்னில் அவுட் 

19 ஐப்பசி 2024 சனி 17:29 | பார்வைகள் : 326


நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய வீரர் ரிஷாப் பண்ட் சதம் விளாசினார். 

பெங்களூருவில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது.

தனது முதல் சதத்தினை பதிவு செய்த சர்பராஸ் கான், 195 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 18 பவுண்டரிகளுடன் 150 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய ரிஷாப் பண்ட், 90 ஓட்டங்களில் இருந்தபோது, நியூசிலாந்து கேப்டன் சௌதீயின் ஓவரில் அடித்த சிக்ஸர், மைதானத்தை விட்டு வெளியேறியதால் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். 

அதனைத் தொடர்ந்து பண்ட் சதம் அடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தபோது, ரூர்க்கே ஓவரில் Inside Edgeயில் போல்டாகி ஆட்டமிழந்தார்.

இதனால் பண்ட் உட்பட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். மொத்தம் 105 பந்துகளை எதிர்கொண்ட பண்ட் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 99 ஓட்டங்கள் எடுத்தார்.         

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்