Paristamil Navigation Paristamil advert login

புறநகர் பரிசில் துப்பாக்கிச்சூடு.. இளைஞன் பலி.. !!

புறநகர் பரிசில் துப்பாக்கிச்சூடு..  இளைஞன் பலி.. !!

24 ஐப்பசி 2024 வியாழன் 13:59 | பார்வைகள் : 1333


பரிசின் புறநகர் பகுதியான Nanterre இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 19 வயதுடைய இளைஞன் கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் Hauts-de-Seine மாவட்ட காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஒக்டோபர் 22, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. 7.62 மி.மீ கலிபர் வகை துப்பாக்கியினால், வீதியில் இருந்த ஒருவரை ஆயுததாரி ஒருவர் சுட்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன், நேற்று மாலை 4 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்