Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் 9 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படை

பாகிஸ்தானில் 9 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படை

24 ஐப்பசி 2024 வியாழன் 15:29 | பார்வைகள் : 1022


பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் 9 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். 

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கையில், 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

பஜார் மாவட்டத்தில் இந்த உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத்தின் ஊடகப் பிரிவான Inter Service Public Relations தெரிவித்துள்ளது. 

கடுமையான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட 9 பேரில் இருவர் Suicide Bombers மற்றும் அதிக மதிப்புள்ள இலக்காக இருந்த பயங்கரவாத வளையத் தலைவரும் அடங்குவர் என கூறப்பட்டுள்ளது. 

கொல்லப்பட்டவர்கள் பொதுமக்களுக்கு எதிரான பல பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என ISPR அறிக்கை கூறியுள்ளது. 

மேலும் பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.    

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்