Paristamil Navigation Paristamil advert login

AUKUS ஒப்பந்தம் - புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை

AUKUS ஒப்பந்தம்  - புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை

19 கார்த்திகை 2024 செவ்வாய் 14:13 | பார்வைகள் : 9144


பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா இணைந்து 10 மடங்கு அதிக வேகத்தில் சென்று தாக்கும் ஹைபர்சோனிக் ஏவுகணைகளை விரைவாக உருவாக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், AUKUS (Australia, UK, US) அணுகுண்டு ஜலாந்தரக் கப்பல் திட்டத்தின் இரண்டாம் நிலையின் கீழ் அமைகிறது.

2028-ற்குள் ஆறு பரிசோதனைப்பயணங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதுதிட்டத்திற்கான செலவு $258 மில்லியன் ஆகும்.


இந்த ஏவுகணையின் அடிப்படை நோக்கம் எதிரிகளின் முன்முயற்சிகளை முறியடித்து மூன்று நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் உலக அமைதியை நிலைநிறுத்துவதாகும்.

“இந்த பணி போர்க்களத்தில் நம்மை முன்னிலைப்படுத்தும்,” என பிரித்தானிய பாதுகாப்புத் துறை செயலாளர் ஜான் ஹீலே கூறினார்.

மூன்று நாடுகளும் தங்கள் திறமைகள் மற்றும் வளங்களை ஒருங்கிணைத்து, அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை விரைவாக உருவாக்கும் திட்டத்தில் ஈடுபடுகின்றன.

ஹைபர்சோனிக் தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்கா முக்கிய முதலீடுகளை செய்து, தன்னை முன்னிலைப்படுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தம் அவுஸ்திரேலியாவுக்கான அணுகுண்டு கப்பல் தொழில்நுட்பத்தை பகிர்ந்த AUKUS ஒப்பந்தத்தின் அடுத்த கட்டமாக கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் மூன்று நாடுகளின் பாதுகாப்பில் புதிய யுக்தியை உருவாக்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்