IPL போட்டி தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு - BCCI

22 கார்த்திகை 2024 வெள்ளி 13:14 | பார்வைகள் : 4109
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அடுத்த மூன்று சீசன்களுக்கான அட்டவணையை BCCI அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் அனைத்து 10 IPL அணிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் இதை அறிவித்துள்ளது. அங்கு லீக்கின் வரவிருக்கும் மூன்று சீசன்களுக்கான "windows" குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, IPL 2025 மார்ச் 14 அன்று தொடங்கும், இறுதிப் போட்டி மே 25 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. 2026 சீசன் மார்ச் 15 முதல் மே 31 வரையிலும், 2027 சீசன் மார்ச் 14 முதல் மே 30 வரையிலும் நடைபெறும்.
போட்டியின் அட்டவணைகளை கடைசி நேரத்தில் BCCI அதிகாரிகள் வெளியிடுவதை தவிர்க்கவே அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் IPL 2025 சீசனுக்கான மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25 திகதிகளில் ஜெட்டாவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1