Paristamil Navigation Paristamil advert login

ஒன்றாறியோவில் பனிப்புயல் தாக்கம்

ஒன்றாறியோவில் பனிப்புயல் தாக்கம்

1 மார்கழி 2024 ஞாயிறு 09:59 | பார்வைகள் : 3448


கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஒரு மீட்டர் அளவில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பனிப்புயல் காரணமாக சுமார் 30,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வீதிகளில் பயணம் செய்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தின் சில பகுதிகளில் பெருமளவு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

பனிப்பொழிவினை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாகன போக்குவரத்து மேற்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்