Paristamil Navigation Paristamil advert login

பனிச்சரிவில் சிக்கி 13 வயது சிறுவன் பலி!

பனிச்சரிவில் சிக்கி 13 வயது சிறுவன் பலி!

26 மார்கழி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 4537


பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார்.

Savoie மாவட்டத்தில் உள்ள des Arcs எனும் புகழ்பெற்ற பனிச்சறுக்கு விளைட்டு மையத்தில் இச்சம்பவம் இடமெப்ற்றுள்ளது. நேற்று கிறிஸ்மஸ் நாளில் பனிச்சறுக்கு விளையாட்டில் குறித்த சிறுவன் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியுள்ளார். பிற்பகல் 3.22 மணி அளவில் இச்ம்பவம் இடம்பெற்றுள்ளது.

பனிச்சரிவில் அல்லது ஆபத்தில் சிக்கினால் பயன்படுத்தப்படும் détecteur de victime d'avalanche (DVA) கருவியினை எடுத்துச் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்