Paristamil Navigation Paristamil advert login

பெண்களை அதிகம் தாக்கும் வெள்ளைப்படுதல் நோய்

பெண்களை அதிகம் தாக்கும் வெள்ளைப்படுதல் நோய்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 8751


 வெள்ளைப்படுதல் என்பது வெள்ளையான திரவம் பெண் உறுப்பிலிருந்து கசிவதாகும். இதன் தன்மை பல காரணங்களினால் வித்தியாசப்படும். சில பெண்கள் பரபரப்பாக இருப்பார்கள். அவர்களுக்கு எப்படி நம் உடலில் வியர்வை அதிகம் சுரக்கிறதோ அது ‘வெள்ளைப்படுதல்’, பெண்களை அதி போன்று பெண் உறுப்பிலோ, கர்ப்பப்பை வாயிலோ உள்ள சுரப்பிகள் அதிகமாக சுரக்கும். 

 
அது தண்ணீரைப் போன்று சற்று பிசுபிசுப்புடன் கசியும். இது சில பெண் களுக்கு இயற்கை நிகழ்வாக இருக்கும். அவர்கள் உடலை தூய்மையாக வைத்துக் கொண்டு மனதையும், சலனப்படாமல் வைத்துக் கொண்டால் தானாகவே சரியாகிவிடும். ரத்த சோகையால் அவதிப்படும் பெண்களுக்கும் வெள்ளைப்படுதல் இருக்கும். 
 
ரத்த சோகையை சரிசெய்து விட்டால் தானாக நின்றுவிடும். இறுக்கமான, குறிப்பாக செயற்கை இழை உள்ளாடைகள் உடுத்துவதாலும் வெள்ளைப்படுதல் ஏற்படும். ‘டீனியா’ என்ற வகை பூஞ்சக் காளானாலும் வெள்ளைப்படும். வெள்ளைப்படும் பெண்களுக்கு, பிறப்பு உறுப்பில் அரிப்பு ஏற்படும். 
 
தூக்கத்திலோ, அல்லது மற்ற நேரங்களிலோ தவறாக சொறிந்து விட்டார்களேயானால் ரணமாகி சிறுசிறு கட்டிகள் தோன்றும். உடல் தூய்மை அவசியம். இறுக்கமற்ற- தூய- பருத்தி உள்ளாடைகளை அணியவேண்டும். சிலருக்கு திரிதிரியாக, பாலாடைக் கட்டி போன்று வெள்ளைப்படும். 
 
நாள்பட்ட வெள்ளைப்படுதல் இருந்தால் அவர்களுக்கு கர்ப்பப்பை வாயில் ரணமாகிவிடக்கூடும். ஆறாத ரணம், காலப்போக்கில் கர்ப்பப்பை வாயில் புற்று நோயாக மாறலாம். வெளியேறுகின்ற வெள்ளை திரவத்தில் புரதசத்து அதிகம் விரயமாவதால், இந்த பெண்கள் உடல் நலிந்து, மெலிந்து காணப்படுவார்கள். 
 
அவர்கள் உடல் சூடாக இருக்கும். சிலருக்கு உடலிலிருந்து துர்நாற்றம் வெளிவரும். வெள்ளைப்படுதல் இருக்கும் பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பது தாமதமாகும். சில பெண்களால் இல்லற வாழ்க்கையை சரியாக மேற்கொள்ள இயலாது. 
 
இதுவரையில் நாம் பார்த்த வெள்ளைப்படுதல், சோர்வு, ரத்தசோகை, அடிக்கடி மாதவிடாய் வருதல் இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்தும் சில பெண்களுக்கு வரலாம். அதைத்தான் நாம் ‘கருப்பை வாய் புற்றுநோய்’ என்கிறோம். 
 
மாதவிடாய் நின்று போன பின்னர், ரத்தம் கலந்த வெள்ளைப்படுதலோ அல்லது துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதலோ இருந்தால் அது 99 விழுக்காடு கர்ப்பபை வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கும். பலூனின் வாய்ப்பகுதியைப் போன்று கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி இருக்கும். 
 
அதில் ஆறாத ரணம் ஏற்பட்டால், பின்னாளில் கர்ப்பப்பையின் முழுவதுமோ அல்லது பக்கத்திலுள்ள சிறுநீர் பையையோ அல்லது உதிரம் வெளியேறுகின்ற ‘வெஜனா’ பகுதியையோ தாக்கக் கூடும். 
 
மாதவிடாய் காலம் தவிர மற்ற நேரத்தில் ரத்தம் கசிதல், துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளை, வெட்டைப்படுதல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், எரிச்சல், வலி, தாம்பத்திய உறவின் போது வலி, உதிரம் படுதல், காரணமில்லாத சோர்வு, ரத்த சோகை இவைகள் தாம் ஆரம்பகால அறிகுறிகள். 
 
'பாப்ஸ்மியர்' என்ற எளிமையான சோதனை மூலம் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடித்து வைத்தியம் செய்தால், வியாதியின் தீவிரத்தை கட்டுப்படுத்தலாம். உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரப்படி ஒரு வருடத்தில் இரண்டு மில்லியன் பெண்களை மரணமடையச் செய்யும் கொடிய நோய், கருப்பைவாய் புற்றுநோய் தான். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்