Paristamil Navigation Paristamil advert login

தென்கொரியாவில்  விமான விபத்து...! 179 பேர் பரிதாபமாக பலி!

தென்கொரியாவில்  விமான விபத்து...! 179 பேர் பரிதாபமாக பலி!

29 மார்கழி 2024 ஞாயிறு 09:57 | பார்வைகள் : 10642


தென்கொரியாவில் உள்ள முவான் விமான நிலையில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் உள்ள முவான் விமான நிலையத்திற்கு இன்றையதினம் (29-12-2024) விமானம் வந்துள்ளது.

முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விமானத்தின் லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறங்கத்தின் போது விமானம் வெடித்து சிதறியது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து 85 பேர் முதற்கட்டமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 179 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்