Paristamil Navigation Paristamil advert login

டெஸ்ட்டில் ரோகித் சர்மா தொடர்பில்  ரிக்கி பாண்டிங் கருத்து

டெஸ்ட்டில் ரோகித் சர்மா தொடர்பில்  ரிக்கி பாண்டிங் கருத்து

3 தை 2025 வெள்ளி 14:41 | பார்வைகள் : 2248


இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகள் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. மோசமான பார்ம் காரணமாக ரோகித் இந்த போட்டியில் இருந்து விலகிய நிலையில் பும்ரா கேப்டனாக செயல்படுகிறார்.

இந்த போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகியது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நிறைய சந்தேகங்களும் கேள்விகளும் கேட்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரோகித் சர்மா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோகித் விளையாட மாட்டார் என்பது அனைவரும் எதிர்பார்த்ததே. கடந்த இரண்டு நாட்களாக நடந்த விஷயங்களில் இருந்து அவர் சிட்னி போட்டியில் விளையாடப்போவதில்லை எனத் தெரிந்தது. அவருக்கு பதிலாக கில் அணியில் இடம் பெறுவார் என்பதும், பும்ரா கேப்டனாக செயல்படுவார் என்பது எதிர்பார்த்தவையே.

இந்தியா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் (சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பின்) விளையாடுவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. ஜூன் மாதத்திற்கு முன்பாக இந்தியா டெஸ்ட் போட்டிகளில் விளையாடப்போவதில்லை. ரோகித் சர்மா அவரது கிரிக்கெட் பயணத்தின் கடைசி கட்டத்தில் உள்ளார். அவர் மிகவும் சிறந்த வீரர். அவர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்