Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் தீ விபத்து - முதியவர் பலி

கனடாவில் தீ விபத்து -  முதியவர் பலி

20 மாசி 2025 வியாழன் 08:03 | பார்வைகள் : 842


கனடாவின் நோர்த் பே தெற்கே உள்ள போர்ட் லோரிங் பகுதியில் திங்கள் காலை ஏற்பட்ட வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்கைல் தீயணைப்புத் துறை, நோர்த் பே அவசர மருத்துவ சேவை, மற்றும் ஒன்டாரியோ மாகாண போலீசார் கடந்த திங்கள் காலை 7:15 மணியளவில் லவெர்ஸ் லேன் பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

"போர்ட் லோரிங் பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக சட்பரி நகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

"இன்னொரு நபர் உடனே அவசர மருத்துவ சேவையால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்." என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்