நம்பிக்கை இல்லா பிரேரணை அறிவித்த La France insoumise..!!
3 மாசி 2025 திங்கள் 17:40 | பார்வைகள் : 1933
பிரதமர் பிரான்சுவா பெய்ரூ இன்று பாராளுமன்றத்தில் 49.3 அரசியலமைப்பை பயன்படுத்தி வரவுசெலவுத் திட்டத்தினை நிறைவேற்றியதை அடுத்து, அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
La France insoumise மற்றும் Parti socialiste கட்சிகள் இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையை அறிவித்துள்ளது.
La France insoumise கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் Manuel Bompard தெரிவிக்கையில், 'கடந்த 25 ஆண்டுகளில் பிரான்ஸ் இதுபோன்ற மோசமான வரவுசெலவு திட்டத்தை கண்டதில்லை!' என தெரிவித்தார்.
இந்த வாரத்திலேயே நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்குரிய வாக்கெடுப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.