Paristamil Navigation Paristamil advert login

இனவாதத்துக்கு எதிராக பரிசில் ஆர்ப்பாட்டம்!!

இனவாதத்துக்கு எதிராக பரிசில் ஆர்ப்பாட்டம்!!

22 பங்குனி 2025 சனி 17:23 | பார்வைகள் : 1669


இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக பரிசில் இன்று மார்ச் 22, சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. 

நண்பகலின் பின்னர் Place de la République பகுதியில் குவிந்த பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கிருந்து Place de la Nation வரை நடைபயணம் மேற்கொண்டனர்.  அவர்கள் பிரான்சில் நிகழும் இனவாத தாக்குதல்களுக்கு எதிராக குரல் எழுப்பினர். இனக்குழுக்கள் மீது கொண்டுவரப்படும் திணிப்புகள், ஒடுக்குமுறைகள் போன்ற்றவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அமெரிக்க பெண் ஒருவர் 'அமெரிக்கா பாசிசத்தை நோக்கி நகர்கிறது. அமெரிக்காவில் இது போன்ற போராட்டங்கள் நமக்குத் தேவை.!" என தெரிவித்தார்.

பிரான்சில் 3.5 மில்லியன் அகதிகள் ஆவணங்கள் இல்லாமல் இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்