Paristamil Navigation Paristamil advert login

கடற்கரையில் கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம்!!

கடற்கரையில் கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம்!!

25 பங்குனி 2025 செவ்வாய் 10:36 | பார்வைகள் : 1114


பா-து-கலே கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Marck (Pas-de-Calais) நகர கடற்கரையில் நேற்று திங்கட்கிழமை காலை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயது குறிப்பிடாத குறித்த பெண் நீரில் மூழ்காமல் இருப்பதற்குரிய உயிர்க்கவச மேலாடை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர் பா-து-கலே கடற்பிராந்தியம் வழியாக படகு ஒன்றில் பிரித்தானியா நோக்கி செல்ல முற்பட்டவேளையில் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,

குறித்த பெண் எரிட்டேயாவைச் சேர்ந்த அகதி எனவும், இவ்வருடத்தில் - சட்டவிரோத கடற்பயணத்தில் ஏற்படும் ஒன்பதாவது மரணம் இது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்