யாழில் விபத்தில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு

29 பங்குனி 2025 சனி 11:03 | பார்வைகள் : 2124
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார்.
ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார்.
சுன்னாகம், கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.