புயல் - பனிப்பொழிவு - நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

30 பங்குனி 2025 ஞாயிறு 06:51 | பார்வைகள் : 4257
இன்று மார்ச் 30 - ஞாயிற்றுக்கிழமை நாட்டின் தெற்கு பகுதிகளில் பனிப்பொழிவு பதிவாகும் எனவும், சில மாவட்டங்களில் புயல் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Ariège, Haute-Garonne , Pyrénées-Atlantiques மற்றும் Hautes-Pyrénées ஆகிய நான்கு மாவட்டங்களில் பனிப்பொழிவு பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
மேலும், Ardèche, Aude, Bouches-du-Rhône , Drôme, Gard, Pyrénées-Orientales மற்றும் Vaucluse ஆகிய ஏழு மாவட்டங்களில் புயல் காற்று வீசும் எனவும், அங்கு 70 தொடக்கம் அதிகபட்சமாக 110 கி.மீ வேகம் வரைக்கும் புயல் வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த மாவட்டங்கள் அனைத்திற்கும் ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.