Marine le Pen விடயத்தில் மவுனம் கலைத்த Macron

2 சித்திரை 2025 புதன் 20:10 | பார்வைகள் : 4813
அரசு தலைவர் Emmanuel Macron, Marine Le Penனின் தண்டனை குறித்து மூன்று விஷயங்களை நினைவூட்டினார் என அரசு பேச்சாளரான Sophie Primas அமைச்சரவையின் கூட்டத்தின்போது கூறினார்.
முதலாவதாக, "நீதியின் சுதந்திரம் உள்ளது" என்றும், RN தலைவரை (marine le pen) கண்டித்து "நீதிபதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை" என்றும், "ஒவ்வொருவருக்கும் சமமான நீதிக்கான உரிமை உள்ளது என்றும் மற்றும் சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.