மியான்மாரில் நிலநடுக்கம்

10 பங்குனி 2025 திங்கள் 09:04 | பார்வைகள் : 180
மியான்மார் நாட்டில் மதியம் 1.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கினறன.
இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது.
125 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.03 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.28 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.