நோர்து-டேம் தேவாலயத்துக்கு அச்சுறுத்தல்! - விசாரணைகள் ஆரம்பம்!!

20 சித்திரை 2025 ஞாயிறு 15:10 | பார்வைகள் : 543
நோர்து-டேம் தேவாலயதுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தேவாலயம் தாக்குதலுக்கு உள்ளாகும் என அந்த அச்சுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 19, நேற்று சனிக்கிழமை தேவாலயத்தின் இருக்கை ஒன்றில் இருந்து இந்த எச்சரிக்கை செய்தி கிடைத்துள்ளது. அதில் தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உடனடியாகவே இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பை பலப்படுத்துமாறு உள்துறை அமைச்சர் Bruno Retailleau தெரிவித்துள்ளார்.