17 வயது சிறுவன் கோர தாக்குதலுக்குள்ளாகிப் படுகொலை!!

21 வைகாசி 2025 புதன் 13:39 | பார்வைகள் : 1138
ஒரு 17 வயது சிறுவன், ழுளைந பகுதியிலுள்ள Nogent-sur-Oise நகரில் உள்ள ஒரு பல்பொருள் பேரங்காடியின் அருகே, செவ்வாய்க்கிழமை இரவு நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் பின்னர் சாவடைந்துள்ளார்.
மாலை 19h00 மணியளவில், Gambetta தெருவில் உள்ள ஒரு பல்பொருள் பேரங்காடியின் அருகே, 17 வயது சிறுவன் பலரால் குழுவாகத் தாக்கப்பட்டார்.
இதில் பெரிய கத்திக்குத்துத் தாக்குதலினால் படுகாயமடைந்த இவர், அதிக அளவில் இரத்தத்தை இழந்துள்ளார்.
அவசர சிகிச்சைப் பிரிவினரால் உடனடியாக் கொண்டு செல்லப்பட்டும் மருத்துவமனையில் சாவடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.