Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை

21 வைகாசி 2025 புதன் 14:00 | பார்வைகள் : 272


இலங்கைமுழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறை அதிகரித்து வருகின்றது.

இது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கடுமையான கவலைகளை தெரிவித்துள்ளது.

அதன்படி, பிற முக்கிய மருந்துகளில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி நிவாரணிகள் மற்றும் இன்சுலின் போன்றவற்றின் கடுமையான பற்றாக்குறையை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மருந்து விநியோகத்தில் தொடர்ந்து ஏற்படும் இடையூறுகள் நோயாளி பராமரிப்பு மற்றும் மருத்துவமனை செயல்பாடுகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் மற்ற சுகாதார அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்