மக்ரோன் தலைமையில் இஸ்லாமிய இயக்கம் குறித்த பாதுகாப்பு ஆலோசனை!

21 வைகாசி 2025 புதன் 14:52 | பார்வைகள் : 4730
மே 21-ஆம் தேதி புதன்கிழமை காலை 11:30 மணிக்கு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஒரு தேசிய பாதுகாப்பு ஆலோசனையை எலிசே அரண்மனையில் நடத்தியுள்ளார். இதில், முஸ்லிம் சகோதரர்கள் இயக்கம், விளையாட்டு மற்றும் கல்வி துறைகளில் ஊடுருவலை கூறும் ஒரு 70 பக்க அறிக்கையை ஆய்வு செய்துள்ளார்.
இந்த ஆவணத்தை சில ஆய்வாளர்கள் மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தயாரித்துள்ளனர். இந்த ஆலோசனையில் பிரதமர் பிரான்சுவா பயரூ, கல்வி அமைச்சர் எலிசபெத் போர்ன், நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனின், உள்துறை அமைச்சர் புரூனோ ரெடைலியோ, பொது கணக்குகள் அமைச்சர் அமெலி டெ மொன்சலே மற்றும் இராணுவ அமைச்சர் செபாஸ்தியான் லெகோர்னு ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறிக்கையின் நோக்கம் அரசை மற்றும் பொதுமக்களை இந்த இயக்கத்தின் ஆபத்துகளைப் பற்றி விழிப்புணர்வூட்டுவதாகும். இது உள்துறை அமைச்சால் பொது மக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1