Paristamil Navigation Paristamil advert login

ஆவணங்கள் இல்லாதவர்கள் திருமணம் செய்ய முடியாது! - பொதுமக்கள் பலத்த ஆதரவு!!

ஆவணங்கள் இல்லாதவர்கள் திருமணம் செய்ய முடியாது! - பொதுமக்கள் பலத்த ஆதரவு!!

23 வைகாசி 2025 வெள்ளி 12:21 | பார்வைகள் : 1437


சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள், ஆவணங்கள் இல்லாதவர்கள், நாட்டை விட்டு வெளியேறப் பணிக்கப்பட்டவர்கள் (OQTF) பிரான்சில் திருமணம் செய்துகொள்வதை தடை செய்ய வேண்டும் எனும் கருத்து மக்களிடையே வலுத்து வருகிறது.

இது தொடர்பாக பிரெஞ்சு மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட  கருத்துக்கணிப்பு ஒன்றில், 'திருமணங்களை தடை செய்ய வேண்டும்' என 73% சதவீதமானவர்கள் தெரிவித்துள்ளனர். 26% சதவீதமானவர்கள் 'தடை செய்யக்கூடாது' எனவும், ஏனைய 1% சதவீதமானவர்கள் கருத்துக்கள் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்பை CSA நிறுவனம் CNEWS, Europe 1 மற்றும் JDD போன்ற ஊடகங்களுக்காக மேற்கொண்டிருந்தது. இதில் 18 வயது நிரம்பிய 1,008 பேர் பங்கேற்றிருந்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்