புதிய பாப்பரசரை அறிவிக்கும் பிரஞ்சு கார்டினால்?

8 வைகாசி 2025 வியாழன் 15:20 | பார்வைகள் : 2913
பிரஞ்சு கார்டினால் டொமினிக் மாம்பெர்ரி(Dominique Mamberti) 73 வயதானவர், புதிய திருத்தந்தை தேர்வுக்குப் பிறகு “Habemus Papam” (நமக்கு ஒரு திருத்தந்தை உள்ளார்) என்ற வரலாற்றுச் செய்தியை உலகிற்கு அறிவிக்கும் பெருமையைப் பெற உள்ளார்.
இந்த அறிவிப்பை வழங்குவது மூத்த கார்டினால்-டியாகன் ஆவார், 2013ம் ஆண்டில் ஜான்-லூயி டூரான் (Jean-Louis Tauran) செய்ததைப்போலவே இம்முறை டொமினிக் மாம்பெர்ரி செய்வதுதான். 2015ல் கார்டினாலாக நியமிக்கப்பட்ட மாம்பெர்ரி, தற்போது திருத்தந்தை தேர்வில் வாக்களிக்கத் தகுதி வாய்ந்த ஐந்து பிரஞ்சு கார்டினால்களில் ஒருவர்.
1952ல் மராக்கெஷில் (Marrakech) பிறந்த மாம்பெர்ரி, அரசியல் மற்றும் பொது சட்டத்தில் பட்டம் பெற்றதற்குப் பின்னர், 1981ல் குருப்பட்டம் பெற்றார். திருவிவேக தூதரக சேவையில் பல நாடுகளில் (அல்ஜீரியா, சிலி, லெபனான், ஐ.நா. போன்றவை) பணியாற்றியவர்.
2006ல் வத்திக்கானின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதும், 2014ல் கத்தோலிக்க திருச்சபையின் உச்ச நீதிமன்றத்துக்குத் தலைவராக உயர்த்தப்பட்டதும், அவரது நீண்ட மற்றும் உயர்மட்ட அனுபவத்தை காட்டுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1