சாதனையைத் தாண்டியுள்ள சிறைகளின் வேதனை!

31 வைகாசி 2025 சனி 11:17 | பார்வைகள் : 811
மே 1 அன்று 83,000 கைதிகளைத் தாண்டியுள்ளதைத் தொடர்ந்து, பிரான்சில் சிறை மக்கள்தொகை புதிய உச்சத்தை எட்டியது.
நீதித்துறையின் தகவல்படி, இதுவே இதுவரை பதிவாகிய அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
பிரான்சில் சிறைகளில் கைதிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து, மே 1, 2025 நிலவரப்படி 83,000-ஐ தாண்டியுள்ளது என்று நீதித்துறை சனிக்கிழமை வெளியிட்ட அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒரு புதிய சாதனை. 83,681 கைதிகள், இது சிறைமையங்களில் உள்ள மக்கள் தொகைக்கு புதிய உச்சமாகும். இந்த நிலைமை, பிரான்சில் நீண்ட காலமாக நிலவும் சிறைநிரம்பிய பிரச்சனையை மோசமாக வெளிக்கொணர்கிறது.
மே 1 தேதியன்று, பிரான்சில் செயல்பாட்டில் உள்ள சிறை இடங்கள் 62,570 மட்டுமே இருந்தன. அதாவது, மொத்த சிறை அடர்த்தி 133.7 சதவீதம் ஆக உள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் இது 125.3 சதவீதம் ஆக இருந்தது.
ஒரு ஆண்டில், சிறைகளில் 6,000 கைதிகள் கூட சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 23 சிறைகள் அல்லது சிறை பிரிவுகளில் சிறை அடர்த்தி 200மூ-ஐத் தாண்டியுள்ளது. இதனால், 5,234 கைதிகள் தரையில் போடப்பட்ட மெத்தையில் தூங்க வைக்கப்படுகின்றனர்.
'ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை'
இந்த நிலையைப் பற்றி வழக்கமாகக் கேட்கப்படும் போது நீதிமன்ற அமைச்சர் ஜெரால்ட் தர்மானின், இது ஒரு 'ஏற்றுக்கொள்ள முடியாத' நிலைமை என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
முன்-தீர்ப்பு கைதிகள் மற்றும் குறைந்த கால தண்டனை பெற்றவர்கள் அடைக்கப்படுகின்ற 'சிறைகளில், சிறை அடர்த்தி 163.2 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது.
நீதித்துறை தரவுகளின்படி,
54,960 கைதிகள் 120 சதவீதத்தைத தாண்டும் அடர்த்தி கொண்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
45,513 கைதிகள் 150 சதவீதத்தைத் தாண்டும் சிறைகளில் உள்ளனர்.