Paristamil Navigation Paristamil advert login

ஒரே நாளில் 1,194 அகதிகள் கடல்மார்க்கமாக பயணம்!!

ஒரே நாளில் 1,194 அகதிகள் கடல்மார்க்கமாக பயணம்!!

1 ஆனி 2025 ஞாயிறு 15:32 | பார்வைகள் : 1045


நேற்று மே 31, சனிக்கிழமை இரவில் பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு 1,194 அகதிகள் சென்றடைந்துள்ளனர்.

18 படகுகளில் அவர்கள் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர். இவ்வருடத்தில் பதிவான ‘ஒரே நாளில் அதிகூடிய அகதிகளின் பயணம்’ இதுவாகும்.

முன்னதாக மே மாத நடுப்பகுதியில் ஒரே நாளில் 825 அகதிகள் பிரித்தானியாவுக்கு பயணித்திருந்தனர்.

இவ்வருடத்தில் பிரித்தானியாவுக்கு கடல் மார்க்கமாக ஆபத்தான பயணம் மேற்கொண்டு இதுவரை 14,811 அகதிகள் சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

Calais மற்றும் Dunkerque  நகர கடற்பிராந்தியங்களூடாக இந்த பயணம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்