Paristamil Navigation Paristamil advert login

கலைத்து கலைத்துக் கொட்டிய தேனீ! - 20 பேர் மருத்துவமனையில்...!!

கலைத்து கலைத்துக் கொட்டிய தேனீ! - 20 பேர் மருத்துவமனையில்...!!

6 ஆடி 2025 ஞாயிறு 18:57 | பார்வைகள் : 423


 

கலைத்துக் கலைத்து தேனீ கொட்டியதில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் Aurillac (Cantal)  நகரில் இன்று ஜூலை 6, ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள Grand Hôtel de Bordeaux தங்குமிடம் ஒன்றின் கூரையில் தேனீக்கள் கூடு கட்டியிருந்த நிலையில், காலை 10 மணி அளவில் திடீரென தேனீ கலைந்தது. அங்கு நின்றிருந்த பலரை துரத்தி துரத்தில் கொட்டியது.

மொத்தமாக 24 பேருக்கு தேனீ கொட்டியதாகவும், அதில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Asian hornets  வகை தேன் சேகரிக்கும் தேனீக்கள் அவை என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்