Paristamil Navigation Paristamil advert login

இரட்டையர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்

இரட்டையர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்

7 ஆவணி 2025 வியாழன் 05:04 | பார்வைகள் : 110


தாய்லாந்தில் 4 வயதான இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்த நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது.

இந்த குழந்தைகளின் திருமண வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

குடும்பத்தில் இரட்டையர்களாக பிறப்போர் ஆண் - பெண்ணாக இருந்தால் அவர்களை சகோதரன் - சகோதரியாக பார்க்காமல் திருமணம் செய்து வைப்பது தாய்லாந்தில் உள்ள புத்த மத வழக்கமாகும்.

ஆண் - பெண் என இரட்டை குழந்தைகளாக பிறப்பவர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்றும் அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்காவிட்டால் அது துரதிர்ஷ்டம் அந்நாட்டில் உள்ள புத்த மதத்தினர் நம்புகின்றனர்.

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்