இரண்டாவது பதவிக்காலத்தின் விம்பத்தில் விளையாடுகிறார்: ஜனாதிபதி அரசாங்கத்தின் மீது அழுத்தம்!!

7 ஆடி 2025 திங்கள் 21:26 | பார்வைகள் : 2857
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத மக்ரோன், பெரும்பான்மை இல்லாத அரசை 2022 முதல் நடத்தி வருகிறார். ஜூலை 5ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், அவரது கட்சி "இப்போதே செயல்பட வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி, பிரான்சுவா பய்ரூவிடம் 40 பில்லியன் யூரோ செலவுகளை குறைக்கும் திட்டத்தை ஜூலை 15க்குள் தாக்கல் செய்ய கூறியுள்ளார். அமைச்சர்களின் பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டும் என மக்ரோன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சாத்தியம்
வரிவிதிப்பு இல்லாத வளர்ச்சி, நாட்டின் கவர்ச்சியுடன் இராணுவ பட்ஜெட்டின் பாதுகாப்பு என்பது மக்ரோனின் நிலைப்பாடாகும். அரசு சுறுசுறுப்பாக இல்லாததையும், அரசியல் ஆர்வங்களையும் அவர் விமர்சித்துள்ளார்.
அரசு பட்ஜெட்டில் மீண்டும் தோல்வியடைந்தால், ஜூலை 8ம் திகதி அவர் மீண்டும் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை பெறுவார். பேரவை கலைப்பு என்பது ஒரு தவிர்க்க முடியாத விருப்பமாக மாறும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1