விண்வெளிக்கு அஸ்தியை கொண்டு சென்ற விண்கலம் விபத்து

9 ஆடி 2025 புதன் 15:23 | பார்வைகள் : 111
விண்கலம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பசுபிக் பெருங்கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விண்வெளிக்கு 166 பேரின் அஸ்தியையும், கஞ்சா விதைகளையும் கொண்டு சென்ற Mission Possible என்ற விண்கலமே இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான செலஸ்டிஸ், இறந்தவர்களின் அஸ்தியை விண்வெளிக்கு அனுப்பி, அவர்கள் நினைவைப் பதிவு செய்யும் திட்டமாக இதைச் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக செலஸ்டிஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.