Paristamil Navigation Paristamil advert login

காசாவில் உயிர்வாழ போராடும் குழந்தைகள் - அதிர்ச்சி தகவல்

காசாவில் உயிர்வாழ போராடும் குழந்தைகள் - அதிர்ச்சி தகவல்

29 ஆனி 2025 ஞாயிறு 19:18 | பார்வைகள் : 205


காசா மீது போர் தாக்கதலை இஸ்ரேல் மேற்கொண்டதில் இருந்து அங்குள்ள குழந்தைகளின் பலி எண்ணிக்கையானது அதிகரித்து காணப்படுகின்றது.

மேலும் காசாவில் உள்ள மருத்துவமனைகளில் அனைத்து விதமான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கர்ப்பிணி தாய்மாருக்கான ஊட்டச்சத்து நிரம்பிய மருந்துகளின் பற்றாக்குறையினால் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக காசாவில் இயங்கிவரும் அவுஸ்திரேலிய தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

போதுமான தாய்ப்பால் இல்லாமல் குழந்தைகள் உயிர்வாழ போராடுவதாக அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.

கடந்த இரண்டு நாட்களில் அதிகளவான குழந்தைகள் உயிரிழந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் இது மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் கூறுகிறது.

மேலும் உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் குழந்தைகளுக்கு சுகாதார ரீதியான பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்