Paristamil Navigation Paristamil advert login

பரிசில் இருந்து புறப்பட்ட விமானம்.. ஸ்வீடனில் அவசர தரையிறக்கம்!!

பரிசில் இருந்து புறப்பட்ட விமானம்.. ஸ்வீடனில் அவசர தரையிறக்கம்!!

30 ஆனி 2025 திங்கள் 06:00 | பார்வைகள் : 886



சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று ஸ்வீடன் தலைநகர் Stockholm  இல் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஜூன் 28, சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை எயார் பிரான்ஸ் அறிவித்துள்ளது. சனிக்கிழமை இரவு 9.24 மணிக்கு சாள்-து-கோலில் இருந்து AF1462 இலக்கம் கொண்ட Airbus A220-300 விமானம் Stockholm  விமான நிலையம் நோக்கி பறந்தது.

தரையிறங்குவதற்கு நேரம் இருந்த நிலையில், விமானத்தில் இருந்து ”code 7700 " எனும் அவசரகால சமிக்ஞ்சை பிறப்பிக்கப்பட்டது. அதை அடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்படுவதற்கு ஓடுபாதைகள் ஒழுங்கமைக்கப்பட்டு, விமானம் தரையிறக்கப்பட்டது.

பெரும் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்