Paristamil Navigation Paristamil advert login

பலவித நோய்களுக்கும் நிவாரணம் தரும் கடுக்காய் !!

பலவித நோய்களுக்கும் நிவாரணம் தரும் கடுக்காய் !!

8 ஐப்பசி 2020 வியாழன் 09:32 | பார்வைகள் : 11170


 அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். 

 
கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு  உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
 
கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.
 
கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளையெல்லாம் வெளித்தள்ளும். கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.  எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். 
 
நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து  பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். 
 
காலை வெறும் வயிற்றில் இஞ்சி - நண்பகலில் சுக்கு - இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம்  என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.
 
கடுக்காய் பொடி எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். விலையும் மிகவும் குறைவு. தினமும் தூங்கப் போகும் முன் ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வர, நம்மை அண்டிய பிணிகள் அகலும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்