Paristamil Navigation Paristamil advert login

காய்கறிகளை வைத்தும் சருமத்தை அழகாக்கலாம்

காய்கறிகளை வைத்தும் சருமத்தை அழகாக்கலாம்

1 ஆடி 2020 புதன் 17:07 | பார்வைகள் : 9034


 நீங்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கிற காய்கள் தான் எல்லாம். விதம் விதமாய் அவற்றை சமைத்து சாப்பிடுகிற நீங்கள், அவற்றில் ஒளிந்திருக்கும் அழகுத் தன்மையையும் தெரிந்து கொள்ளுங்கள். சமையலுக்குப் போக தினம் ஒரு பகுதியை அழகுக்கும் ஒதுக்குவீர்கள்.

 
கேரட்:
 
 
விட்டமின் ஏ அதிகமுள்ள காய் இது சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது. கேரட்டை பால்விட்டு விழுதாக அரைத்து, முகத்துக்கு பேக் மாதிரிப் போட்டுக் கழுவினால், நிறம் கூடும். கேரட் சாற்றுடன், தேன் கலந்து முகத்தில் போட்டாலும் நிறம் கூடும்.
 
உருளைக் கிழங்கு:
 
இதன் சாறு எடுத்து கரும்புள்ளிகளின் மேல் தடவ. அவை மறையும். கண்களுக்கடியில் உள்ள கருவளையங்கள் மறையும். உருளைக் கிழங்கை வேக வைத்து, மசித்து அத்துடன் இரண்டு ஸ்பூன் பால், நான்கு துளிகள் தேன் கலந்து முகத்தில் தடவினாலும் நிறம் கூடும்.
 
முட்டைக்கோஸ்:
 
எக்கச்சக்க தாதுப் பொருட்கள் அடங்கியது இது. இதை நன்றாக வேகவிட்டு, அந்தத் தண்ணீரீல் முகம் கழுவினால், முகம் மாசு மறுவின்றி பளபளக்கும்.
 
புதினா:  
 
இதன் சாற்றுடன், சம அளவு தண்ணீர் கலந்து பருக்களின் மேல் போட, அவை விட்டால் போதும் என ஓடும். கரும்புள்ளிகளும் மறையும்.
 
கொத்தமல்லி:
 
தினம் இரவில் இதைக் கொஞ்சம் கசக்கி, அந்தச் சாற்றை உதடுகளில் தடவி வர, லிப்ஸ்டிக் போடாமலேயே உங்கள் உதடுகள் சிவப்பாகும்.
 
அரைக்கீரை:
 
அரைக்கீரையின் சாறெடுத்து அத்துடன் கொஞ்சம் மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவிப் பாருங்கள். பிளீச் செய்தது மாதிரி உங்கள் முகம் பளிச்சென்றாகும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்