Paristamil Navigation Paristamil advert login

சருமத்தை பொலிவடையச்செய்யும் பாதாம் பேஷியல்

சருமத்தை பொலிவடையச்செய்யும் பாதாம் பேஷியல்

19 தை 2018 வெள்ளி 11:37 | பார்வைகள் : 9727


 வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை சருமத்தை பராமரித்தால் என்றும் ஒரே மாதிரியான இளமையான சருமத்தை பெறலாம். மேலும் பாதாமை அரைத்து முகத்தில் போட்டு 15 நிமிடம் கழித்து காய்ந்ததும் கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமம் பளபளப்பாகவும், வெண்மையாகவும் மாறுவதை காணலாம்.

 
பாதாம் ஃபேஸியல் :
 
பாதாம் - 6
பால் - 1 ஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் 
கடலை மாவு - 2 ஸ்பூன்.
 
பாதமை ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கடலை மாவு, எலுமிச்சை சாறு பால் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி மசாஜ் 15 நிமிடங்கள் செய்யுங்கள். பின்னர் நன்றாக காய்ந்ததும் கழுவி விடவும். 
 
முகம் எவ்வித மாசுவையும், இறந்த செல்களையும் அகற்றி, பளிச்சென்று வைத்திருக்கும்.
 
இந்த ஃபேஸியலை வாரம் ஒருமுறை செய்து வாருங்க. படிப்படியான உங்கள் சருமம் இளமையாகவும், மென்மையாகவும் மாறுவதை பார்க்கலாம்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்