Paristamil Navigation Paristamil advert login

உதடுகள் மென்மையாக்கும் தேங்காய் எண்ணெய்

உதடுகள் மென்மையாக்கும் தேங்காய் எண்ணெய்

18 மார்கழி 2017 திங்கள் 10:01 | பார்வைகள் : 9607


 குளிர்காலத்தில் உதடுகளில் வெடிப்பும், வறட்சியும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. உதடுகளில் ஈரப்பதம் இல்லாமல் போவதே அதற்கு காரணம். எண்ணெய் வகைகளை பயன்படுத்தி உதடுகளுக்கே இயல்பான மென்மை தன்மையையும் ஈரப்பதத்தையும், தக்க வைத்துக்கொள்ளலாம். குறிப்பாக தேங்காய் எண்ணெய் உதடுகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும். அது உதடுக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து மிருதுதன்மையை உருவாக்கும்.

 
ஆலிவ் ஆயில் உதடு வெடிப்பை கட்டுப்படுத்தும். எப்போதும் உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். காலையிலும், மாலையிலும் ஆலிவ் எண்ணெய்யை உதடுகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வரலாம்.
 
உதடுகள் வறட்சி ஏற்படாமல் இருக்க இரவில் படுக்க செல்லும் போது தேங்காய் எண்ணெயால் சிறிது நேரம் உதட்டில் மசாஜ் செய்து வரலாம்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்