Paristamil Navigation Paristamil advert login

விண்வெளியில் மாயமானது மிகப்பெரிய Black hole!

விண்வெளியில் மாயமானது மிகப்பெரிய Black hole!

17 தை 2021 ஞாயிறு 12:34 | பார்வைகள் : 9405


விஞ்ஞானிகளைத் தொடர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பல விஷயங்கள் நம் பிரபஞ்சத்தில் உள்ளன. அவற்றில் பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளைகள் மிக முக்கியமானவை.  பல விண்வெளிப் பொருட்கள் மற்றும் அம்சங்களைப் பற்றிய மர்மங்கள் இன்னும் நீங்காமல் உள்ளன. இப்போது, ​​ஒரு அண்ட நிகழ்வு வானியலாளர்களை உலுக்கியுள்ளது!

 
தொலைதூரத்தில் இருந்த ஒரு விண்மீன் பேரடை அதாவது கேலக்சியில் அமைந்திருப்பதாக முன்னர் நம்பப்பட்ட ஒரு மிகப்பெரிய கருந்துளை திடீரென மறைந்துவிட்டது.
 
“A2261-BCG” என அழைக்கப்படும் கேலக்சி அதன் கருந்துளையை இழந்துவிட்டதாக தெரிகிறது. விஞ்ஞானிகள் (Scientists) இப்போது அந்த கருந்துளை விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கக் கூடும் என்று நம்புகிறார்கள். அப்படியானால் இது போன்ற முதல் நிகழ்வாக இது பதிவு செய்யப்படும்.
 
இதற்கு முன்னர் மனிதர்களால் கண்டறியப்பட்ட எந்த கருந்துளையும் மறைந்ததாக பதிவோ குறிப்போ இல்லை. மறைந்திருக்கும் முதல் கருந்துளையான A2261-BCG தற்போது பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
 
கேலக்சியில் (Galaxy) எங்கிருந்தோ வெளிப்படும் ஒரு பேராற்றல் வாய்ந்த சக்தி இந்த மிகப்பெரிய கருந்துளை வெளியேறுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கருந்துளையை வெகு தொலைவிற்கு தள்ளும் அளவுக்கு அந்த சக்தி ஆற்றல் மிக்கதாக இருந்திருக்கும்!
 
வட அமெரிக்காவின் (America) பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியாளர்கள் இந்த விண்வெளி நிகழ்வைக் கண்டனர்.
 
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு கேலக்சியின் மையத்திலும் குறைந்தது ஒரு பெரிய கருந்துளையாவது இருக்கிறது. இது நமது பூமி உள்ள மில்கிவே எனப்படும் பால்வழியிலும் உள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்