Paristamil Navigation Paristamil advert login

4 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ்

4 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ்

18 சித்திரை 2021 ஞாயிறு 11:56 | பார்வைகள் : 9003


நாசாவும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து 3வது முறையாக விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பவுள்ளது.

 
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற தாமஸ் பெஸ்கெட் ( Thomas Pesquet), மேகன் மெக் ஆர்தர் (Megan McArthur), நாசா காமண்டர் ஷேன் கிம்பரோ (Shane Kimbrough)மற்றும் ஜப்பானை சேர்ந்த விண்வெளி வீரரான அகிஹிகோ ஹோஷைட்(Akihiko Hoshide ) ஆகிய 4 பேரும் ஏப்ரல் 22 ஆம் தேதி புளோரிடா மாகாணத்திலுள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஏவப்படும் பால்கன் 9 ராக்கெட்டில் பறக்கவுள்ளனர்.
 
இவர்கள் 6 மாத காலம் அங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்வர். கடந்த ஆண்டு மே மாதம் 2வீரர்களும், நவம்பர் மாதம் 4 வீரர்களும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணுக்கு சென்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்