Paristamil Navigation Paristamil advert login

செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு ஏற்பட்டதை கண்டறிந்த நாசா!

செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு ஏற்பட்டதை கண்டறிந்த நாசா!

3 சித்திரை 2021 சனி 09:13 | பார்வைகள் : 9124


செவ்வாய் கிரகத்தில் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 
பூமியைப் போன்று செவ்வாயில் நிலத்தடித் தட்டுக்கள் இல்லை என்றாலும் எரிமலை வெடிப்பினால் நில அதிர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நாசா விஞ்ஞானிகள் அனுப்பிய இன்சைட் என்ற ஆய்வூர்தி நடத்திய சோதனையில் அங்கு இருமுறை நில அதிர்வு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
அங்குள்ள செர்பரஸ் ஃபோஸே என்ற இடத்தில் ஏற்பட்ட நில அதிர்வுகள் முறையே 3 புள்ளி 3 மற்றும் 3 புள்ளி ஒன்று ஆக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.இரு நில அதிர்வுகளுக்குப் பின்னர் சிறிதும் பெரிதுமாக 500 முறை நில அதிர்வு ஏற்பட்டதாகவும் நாசா கூறியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்