சூரிய மண்டலத்துக்கு வெளியே 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு!

6 சித்திரை 2019 சனி 09:09 | பார்வைகள் : 13255
பூமி ஓர் அங்கமாக இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பூமியில் மட்டுமல்லாது விண்ணிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் இந்த கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
1992ஆம் ஆண்டு அலெக்ஸ்சாண்டர் வோல்ஸ்சான் மற்றும் டேல் ஃபிரெய்ல் ஆகியோர் ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள்களைக் கண்டறிந்ததே நாம் இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே கோள்கள் கண்டறியப்பட்டது முதல் முறையாகும்.
ஐரோப்பாவின் 'தி எக்ஸோசோலார் பிளானட்ஸ் என்சைக்ளோபீடியா' இதுவரை 4,000க்கும் மேலான கோள்களை, சூரிய மண்டலத்துக்கு வெளியே இருப்பதை உறுதிப்படுத்தி ஆவணப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நாசா 4,000 எனும் இலக்கை அடைய இன்னும் 74 கோள்களை ஆவணப்படுத்த வேண்டும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1