Paristamil Navigation Paristamil advert login

பெண்களை எளிதில் மடக்குவதற்கு ஆண்கள் கூறும் பொய்கள் ...

பெண்களை எளிதில் மடக்குவதற்கு ஆண்கள் கூறும் பொய்கள் ...

7 ஐப்பசி 2022 வெள்ளி 15:09 | பார்வைகள் : 10536


 ஆண்களாகவும் சரி பெண்களானாலும் சரி காதல் என்று வரும் போது பல்வேறுபட்ட பிரச்சினைகளை முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதேவேளை காதல் உணர்வில் ஆண்கள் கூறும் பொய்களை பற்றி ஒவ்வொரு பெண்ணும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.

 
ஒரு பெண்ணை காதல் என்ற உறவில் சிக்க வைக்க அபரிதமான அளவில் அன்பை அவர் மீது பொழிவது தான் காதல் குண்டை உபயோக்கிப்பது.
 
சொல்லப்போனால், மனதை கட்டுப்படுத்தும் இந்த காதல் பாம்மிங் டெக்னிக் அனைத்து வகையான உறவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் காதல் உறவுகளில் அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை மட்டுமே நாம் பார்க்கப்போகிறோம்.
 
ஒரு ஆண் மிகவும் ஆடம்பரமான முறையில் தன் காதலையும், அன்பையும் வெளிப்படுத்தி, அதன் மூலன் அந்த பெண்ணை தன் காதலில் மூழ்கடிக்க முயற்சி செய்தால், கண்டிப்பாக மனதை கட்டுப்படுத்தும் காதல் குண்டிற்கான தெளிவான எச்சரிக்கை அறிகுறியே இது.
 
தங்கள் கைகளில் அந்த பெண் வேகமாக சிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, சிலர் இந்த வழிமுறையை பின்பற்றுவார்கள். அந்த பெண் காதலில் விழுந்து விட்டால், தங்கள் வழக்கமான வழியில் அந்த பெண்ணை திட்ட தொடங்குவார்கள். இதனால் கிடைக்கும் இன்பத்தில் மகிழ்ச்சி கொள்பவராக விளங்குவார்கள்.
 
காதல் குண்டை பயன்படுத்துவது என்றால் என்ன என்பது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும். இனி ஆண்களிடம் இவ்வகையான குணங்கள் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதைப் பற்றி இனி பார்க்கலாம்.
 
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், உங்களின் காதலன் உங்கள் மீது உண்மையிலேயே காதலில் இருக்கிறாரா அல்லது வெறும் காதல் குண்டை மட்டும் பயன்படுத்துகிறாரா என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாகும்.
 
ஏன் என்று கேட்கிறீர்களா? நாம் அனைவரும் காதலுக்காக ஏங்குவோம். அப்படி இருக்கும் போது, திடீரென நம் மீது யாராவது காதலை மழையாக பொழியும் போது,
 
அதற்கான காரணங்களை ஆய்வு செய்யத் தான் நமக்கு தோன்றுமா? கண்டிப்பாக அவ்வகையான நபரின் மீது காதலில் விழுவோம். ஒரு நிமிடம்! காதல் குண்டை பயன்படுத்துவதைப் பற்றி தெரிந்து கொண்டீர்கள், காதலிப்பதற்கு முன்பு உங்கள் ஆண் காதல் குண்டை பயன்படுத்துகிறாரா என்பதை எப்படி கண்டுப்பிடிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது தானே.
 
 
ஒரு பெண்ணை தன் இழுப்பிற்கு ஒரு ஆண் வளைக்க நினைத்தால், அவன் கூறும் முதல் பொய் இதுவாக தான் இருக்கும். தன் அழகை பற்றி ஒரு ஆண் இப்படி புகழும் போது கண்டிப்பாக அந்த பெண்ணிற்கு ஆனந்தமாக தான் இருக்கும். ஆனால் இதில் எல்லாம் மயங்கி விடாதீர்கள்! சிறிது பொறுத்திருந்து பார்க்கவும்.
 
பெண்களே! தன் வாழ்க்கையை உங்களிடம் ஒப்படைக்காதவரை, ஒரு ஆணை புரிந்து கொள்வது உங்கள் கடமை கிடையாது.
 
என் உலகத்தின் மையமே நீ தான்ஆண்கள் கூறும் மிகப்பெரிய பொய் இது. பெண்களுக்கு சிறப்பான ஒரு உணர்வை ஏற்படுத்த ஆண்கள் இப்படி கூறுவார்கள். ஒரு ஆண் உங்கள் மீது பைத்தியமாக இருப்பதையும், உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் என்பதையும் நீங்கள் அறிந்தால், உங்கள் உணர்ச்சிகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, அந்த நபரின் உண்மையான நோக்கத்தை அலசுவது கண்டிப்பாக கஷ்டமான ஒன்றே. தங்களின் இறுதியான இன்பத்தை பெறும் வரை, ஆண்கள் பெண்களின் மனதை மேக மூட்டத்துடன் வைத்திடவே விரும்புவார்கள். அதனால் அனைத்து வழிகளிலும் அவர் காதலை சோதித்துப் பாருங்கள் பெண்களே!
 
நீ இல்லாத வாழ்க்கையை வாழ்வதே வீண்நீங்கள் ஒரு புத்திசாலியான பெண்ணாக இருந்தால், ஏதோ ஒன்று தவறாக உள்ளதே என்று ஆண்கள் கூறும் இந்த பொய்யை வைத்து கண்டுபிடித்து விடுவீர்கள்.
 
ஆனால் இந்த பொய்யால் நீங்கள் மயங்கி விட்டீர்கள் என்றால், காதலின் மீது மிக ஆழமான ஏக்கத்தை நீங்கள் கொண்டிருந்திருக்கிறீர்கள்.
 
அதேப்போல் இதுவரை பார்த்திருந்த சில உணர்ச்சி ரீதியான தேவைகளையும் கொண்டிருந்திருக்கிறீர்கள் என்பதையே அது உணர்த்தும். காதல் குண்டை பயன்படுத்தும் ஆண்கள் கூறும் மற்றொரு பொய் இது என்பது புரிந்து கொள்ளுங்கள் பெண்களே! இந்த சுயநலமான உலகில், யாரும் யாருக்காகவும் சாவதில்லை.
 
அதனால் அவரிடம் பார்த்து மெதுவாக அணுகவும்.என்னை காதலிக்கவில்லை என்றால் நான் செத்துவிடுவேன்இது ஒரு உணர்ச்சி ரீதியான மிரட்டலாகும்.
 
ஆனால் உங்கள் மீதுள்ள காதலால் ஒருவர் உங்களுக்காக சாக கூட தயாராக உள்ளார் என்பது உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தினால், நீங்கள் இன்னும் வளரவில்லை என்று தான் அர்த்தமாகும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்