Paristamil Navigation Paristamil advert login

இல்லற வாழ்வில் ஆணும், பெண்ணும் இதை செய்யலாமா?

இல்லற வாழ்வில் ஆணும், பெண்ணும் இதை செய்யலாமா?

30 வைகாசி 2022 திங்கள் 08:42 | பார்வைகள் : 9949


 ஆண், பெண் இருவருக்கும் மனதளவிலும், உடல் அளவிலும் இன்பம் தரக் கூடியது செக்ஸ் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே சமயம், நம்மில் பலருக்கு செக்ஸ் என்றால் இதுதான் என்று ஒரு பொதுவான வரையறை இருக்கிறது. ஆனால், ஆணும், பெண்ணும் நேரடி உடலுறவு வைத்துக் கொள்வது மட்டுமே இயற்கையானது என பலர் கருதுகின்றனர்.

ஆண், பெண் இருவரும் பரஸ்பரம் எதிர் பாலினத்தவரின் பிறப்புறுப்பை தூண்டுவது, சீண்டுவது, வாய்வழி புணர்ச்சியில் ஈடுபடுவது என்பதும் கூட இயற்கையானது தான். இதுவும் உங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தரக் கூடும். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இது தெரியும் என்றாலும் கூட, இது இயற்கைக்கு விரோதமானது அல்லது அசிங்கமானது என கருதி இதை தவிர்த்து விட்டு, நேரடி உடலுறவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

 
வாய்வழி புணர்ச்சியில் இன்பம் கிடைக்குமா? நிச்சயமாக பேரின்பம் கிடைக்கும். உங்கள் உடலில் உள்ள அனைத்து அணுக்களையும், உணர்வுகளை தூண்டக் கூடியது இது. குறிப்பாக, வாய்வழி சேவையை பெறும் நபருக்கு இது மிகுந்த இன்பம் மற்றும் திருப்தியை தரக் கூடியதாக அமையும். சரி வாய்வழி புணர்ச்சியை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று சந்தேகம் எழுகிறதா. உங்களுக்கான டிப்ஸ் இதோ.
 
உடலில் இருந்து கழிவாக பிறப்புறுப்பின் வழியே தான் சிறுநீர் வெளியேறுகிறது என்பதால், நீங்கள் வாய்வழி புணர்ச்சிக்கு திட்டமிட்டவுடன் அங்கு நன்றாக சுத்தம் செய்து கொள்வது அவசியம். துர்நாற்றம் வீசுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆகவே, ஒவ்வொரு முறை இதற்கு திட்டமிடும்போதும், குளித்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருக்கவும்.
 
 
உடல் வாசத்தை மாற்றும் உணவுகளை தவிர்க்கவும் : நாம் உண்ணும் உணவைப் பொருத்து நம் உடலின் வாசம் மாறுபடும். உதாரணமாக நீங்கள் வெங்காயம் சாப்பிடவும் உங்கள் வாய் நாறும். அதுபோல சில உணவுகள் நம் அந்தரங்கப் பகுதிகளின் வாசத்தை மாற்றக் கூடியவை. ஆகவே, சர்க்கரை, பூண்டு, மசாலா போன்ற உணவுகளை இந்த நாளில் தவிர்க்க வேண்டும்.
 
அவசரம் வேண்டாம் : வாய்வழி புணர்ச்சியில் அவசரம் காட்டக் கூடாது. நின்று, நிதானமாக செயல்பட வேண்டும். உணர்ச்சி மிகுந்த இடங்களை மெல்ல, மெல்ல தூண்டுவதும், நிதானமாக நீங்கள் செயல்படுவதும் உங்கள் பார்ட்னருக்கு சொர்க்கத்தில் இருப்பதை போன்ற மகிழ்ச்சியை கிடைக்க செய்யும்.
 
 
கண்களைக் கட்டிக் கொள்ளலாம் : நீங்கள் வாய்வழி புணர்ச்சியை தொடங்கும் முன்னர் உங்கள் பார்ட்னரின் கண்களை துணியால் கட்டி விடலாம். அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள், எங்கு தொட உள்ளீர்கள் என்ற குறுகுறுப்பான எதிர்பார்ப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்