Paristamil Navigation Paristamil advert login

உலகம் ஆனாய் !

உலகம் ஆனாய் !

13 தை 2019 ஞாயிறு 07:40 | பார்வைகள் : 9563


சாயம் போன மேகம் போலே

சாயங்கால வானம் போலே
உளிபடாத கல்லை போலே
எழுதிடாத சொல்லை போலே
வெறுமை தீயில்
வெந்து கிடந்தேனே...!
 
நடு இரவில் நிலவை போலே
சுடும் வெயிலில் குளிரை போலே 
வெறும் நிலத்தில் பூவை போலே
பெரும் கடலில் தீவை போலே
நீங்கா நிழலாய்
நீயும் வந்தாயே...!
 
கொட்டி தீர்க்கும் 
காதல் கொண்டாய்...!
தொட்டு தூங்க
தோள்கள் தந்தாய்...!
முட்டிமோதும் முத்தத்தாலே
முழுதாய் கொன்றாயே...
 
விழிகள் பார்த்து 
உருகி நின்றேன்...!
மொழிகள் சேர்த்து
பருகி தின்றேன்...!
உன் வழிகள் தோறும்
உடன் வந்து செல்வேனே...
 
காதல் தந்தாய்...!
காத்திருந்தாய்...!!
ஒற்றை இதயமாய்
ஒட்டி கலந்தாய்...!!!
உயிரில் நுழைந்து - என்
உலகம் ஆனாயே...

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்