Paristamil Navigation Paristamil advert login

வெல்லும் சொல்

வெல்லும் சொல்

11 மாசி 2020 செவ்வாய் 12:14 | பார்வைகள் : 9582


ஆசையே துன்பத்திற்கு காரணம்
ஆசைக்கு அணை போட்ட
அன்பான புத்தர் வாக்கு
அர்த்தம் உள்ள சொல்வாக்கு !
 
‘ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தை திருப்பிக் காட்டு
ஏசுநாதரின் சொல்வாக்கு
மாசுபட சினம் கொள்பவரை
பசுபோல் பணியச் செய்துவிடும் !
 
சத்திய வாக்கை தவறாமல்
கடைபிடித்து வாழ்ந்த
அரிச்சந்திரன் வரலாறு
அன்று கண்ட காந்தியை
இன்று சத்தியசோதனை
எழுத வைத்து
வாழ்வில் மகாத்மாவாக்கியது !
 
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடிய வள்ளலார்
வடித்த சொற்கள் – இன்று
உலக மக்களிடையே 
உயிர் இரக்கம் வளர்த்தது!
 
அடித்தாலும் உதைத்தாலும்
பள்ளிக்குச் செல்லாத பிள்ளை
‘படித்தால் வாழ்வில்
கொடிபோல் உயரலாம் ‘
அன்னையின் சொற்கள்
 
பள்ளிக்கு செல்ல வைத்தது !
எமனிடம்
‘என் கணவன் இல்லாமல்
குழந்தை வரம் பலிக்குமா?!’
கேட்ட சத்யவான்சாவித்திரி
கேள்விக் கணையே
சத்யவான் உயிரை மீட்கும்
வெல்லும் சொல்லானது !
 
கல்லும் கசிந்துருக
கள்ளமில்லாப் பிள்ளைபோல்
சொல்லும் செயலுமிருந்தால்
வாழ்வில் உனக்கு
வெல்லும் இனிய சொல் !
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்