Paristamil Navigation Paristamil advert login

மழை வேண்டி...!

மழை வேண்டி...!

15 மார்கழி 2019 ஞாயிறு 13:09 | பார்வைகள் : 9239


கொட்டும் மழையில்,
சொட்டும் துளியில்,
பட்டுக் குடையோடு
பயணிக்கிறாய் நீ...
 
குடையின் நுனிவழியே,
நுழைந்து உள்ளே வரும்
மழைத்துளியோ - உன்
கன்னத்தை தொட்டு
காதல் செய்கிறது...!
 
குறுகுறுவென பார்க்கும்
குடையோ - உன்
கைவிரலின் தொடுதலோடு
இறைவனோடு
வேண்டிக்கொண்டிருந்தது...!
இவள் பயணங்களிலெல்லாம்
மழை வேண்டுமென...

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்