Paristamil Navigation Paristamil advert login

உணர்வுகள்..

உணர்வுகள்..

16 தை 2013 புதன் 07:36 | பார்வைகள் : 10604


 

அன்று
உன் முகம்
காணாத நேரமதில்
முரண்பட்டு
வெளியானது
முரண்டுக்குணம்!

அறியும் வயதிருந்தும்
அறிய முடியாத
சூழ்நிலை கைதியாய்
உணர்வுகள்.

தலைக்கேறிய
கோபம்
தணிய மறுத்த
தனிமையின் கொடுமையது!

குழந்தையாய்
சிரிக்கின்றாய் இன்று
கூனிக்குறுகி
தலை குனிகிறது
உணர்வுகளுடன்
முரட்டுக்குணமும்!

பாவம் போக்கிட
புலம்பி அலைகிறேன்
நெஞ்சில் சுமந்து
திரிகிறேன்.
நாமத்தை உச்சரிக்கிறேன்
இருந்தும்
மீண்டும் ஒரு
வன்முறையாய்
தடைகள் விதிக்கிறது
தலைமை!

ஐ.நா சென்று
முறையிட முடியாத
பாவியாய்
மீண்டும் ஒரு
கைதியாய்
போராடிக் கொண்டிருக்கிறேன்...

http://pirashathas.blogspot.com/

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்