Paristamil Navigation Paristamil advert login

4500 ஆண்டுகள் பழமையான சூரியன் ஆலயம் கண்டுபிடிப்பு!

4500 ஆண்டுகள் பழமையான சூரியன் ஆலயம் கண்டுபிடிப்பு!

20 கார்த்திகை 2021 சனி 07:03 | பார்வைகள் : 10171


1898 ஆம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நியூசெர்ரா அல்லது நியூசெர்ரே என்றும் அழைக்கப்படும்  சூரியக் கோயிலைக் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்தில் தொலைந்து போன 4500 ஆண்டுகள் பழமையான சூரிய கோவிலை கண்டுபிடித்துள்ளனர்.

 
இந்தக் கோவில்,  கிமு 25 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்டது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வார்சாவில் உள்ள மத்தியதரைக் கடல் மற்றும் ஓரியண்டல் கலாச்சாரங்களுக்கான போலந்து அகாடமி ஆஃப் சயின்சஸ் இன்ஸ்டிட்யூட்டில் எகிப்தியலஜி (Polish Academy of Sciences' Institute for Mediterranean and Oriental Cultures) உதவிப் பேராசிரியரான மிஷன் இணை இயக்குநர் மாசிமிலியானோ நுசோலோ, சூரியனின் ஆலயம் (Sun Temple) கண்டுபிடிக்கப்பட்டத் தகவலை தெரிவித்தார்.
 
கெய்ரோவின் தெற்கே, 12 மைல் தொலைவில் உள்ள அபு குராப்பில் உள்ள மற்றொரு கோயிலுக்கு (Debries under temple) அடியில் புதைவுண்டு கிடந்த பழங்கால சூரியக் கோயிலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக CNN இடம் கூறினார். 
 
"19 ஆம் நூற்றாண்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நியுசெராவின் கல் கோயிலுக்கு கீழே உள்ள இந்த மண் செங்கற்கள் கட்டிடத்தின் மிகச் சிறிய பகுதியை மட்டுமே தோண்டினர், அது சூரியன் கோவிலின் முந்தைய கட்டிடம் என்று முடிவு செய்தோம்" என்று நுசோலோ இந்தத் தகவலை மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார்.
 
"இப்போது எங்கள் கண்டுபிடிப்புகள் இது முற்றிலும் வித்தியாசமான கட்டிடம் என்பதை நிரூபிக்கிறது, இது நியுசெராவுக்கு முன்பு கட்டப்பட்டக் கோவில் என்பது உறுதியாகிறது," என்று அவர் கூறினார்.
 
நியுசெராவுக்கு (Nyuserra) முன், எகிப்தை ஆண்ட மன்னர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகளையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் (archaeologists) கண்டுபிடித்துள்ளனர். இரண்டு சுண்ணாம்பு நெடுவரிசைகள் மற்றும் ஒரு சுண்ணாம்பு வாசலின் தளங்களையும் அவர்கள் கண்டறிந்தனர்.
 
மண் செங்கற்களைப் பயன்படுத்தி அசல் கட்டுமானம் கட்டப்பட்டுள்ளதாகவும் (Infrastructure), தோண்டும்போது அவற்றுடன் இருந்த பல பீர் ஜாடிகளும் (Beer Jar) கண்டுபிடிக்கப்பட்டதாகவும் நுசோலோ கூறினார். மண் செங்கல் நினைவுச்சின்னம் "அளவில் ஈர்க்கக்கூடியதாக இருந்தது," என்றும் நுஸோலோ கூறினார், ஆனால் நினைவுச்சின்னம் சூரிய கோவிலை கட்டுவதற்காக Nyuserre மூலம் அழிக்கப்பட்டது.
 
"எனவே, இந்தக் கோவிலின் முக்கிய நோக்கம் வாழும் அரசரை தெய்வமாக்குவதாகவே இருந்தது" என்று நுசோலோ கூறினார்.
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்